ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தென்னிந்திய ரசிகர்களிடம் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் மட்டுமல்ல பொது இடங்களிலும் கூட எப்போதும் புன்னகையுடன் வலம் வரும் ராஷ்மிகாவை பார்க்கும் போது எதிரில் இருப்பவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி தொற்றிக்கொள்ளும். அது மட்டுமல்ல எந்த இடத்திலும் ரசிகர்களை ஒதுக்காமல் அவர்களுடன் பேசி, புகைப்படம் எடுத்துக் கொள்ள தயங்காதவர்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் வருகை தந்திருந்தார் ராஷ்மிகா. இந்த நிகழ்ச்சியில் அவரே எதிர்பாராத விதமாக கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கும் வரவேற்பதற்கும் தயாராக கூடியிருந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போய்விட்டதாக கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அவர்களை உர்ச்சாகப்படுத்தும் விதமாக வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலின் சில வரிகளுக்கு நாணமும் ஆடினார் ராஷ்மிகா.
“இத்தனை பேர் கூடியிருந்தாலும் இந்த நிகழ்ச்சி எந்தவித குழப்பமும் இல்லாமல் அழகாக நிர்வகிக்கப்பட்டது. இத்தனை பேரின் அன்பை பெறுவதற்காக நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனாலும் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன் கேரள ரசிகர்களை டார்லிங் என்றும் புகழ்ந்துள்ளார் ராஷ்மிகா.