ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தொடர்ந்து மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் பிஸியான நடிகையாக மாறி படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசு, பின்னர் திருமணம் ஆகியவற்றால் பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கினார். அதன் பிறகு தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் நடித்து வரும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் பாலும் பழமும் என்கிற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் மலையாள குணச்சித்திர நடிகர் இர்ஷாத் என்பவர் மீரா ஜாஸ்மினுடன் தான் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.. அது மட்டுமல்ல 'பாடம் ரெண்டு சல்லாபம்' என்கிற வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளார். இதை ஏன் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே.. கடந்த 2003-ல் இயக்குனர் டிவி சந்திரன் இயக்கத்தில் வெளியான ‛பாடம் ஒன்னு ஒரு விலாபம்' என்கிற படத்தில் மீரா ஜாஸ்மினின் கணவராக நடித்திருந்தார் நடிகர் இர்ஷாத்.
அந்த படம் மீரா ஜாஸ்மினுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கேரள அரசின் மாநில விருதையும் பெற்று தந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இவர்கள் சந்தித்து இருப்பதும், நடிகர் இர்ஷாத் இதுபோன்று ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருப்பதை பார்க்கும்போதும் ஒருவேளை இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இவர்கள் மீண்டும் இணைந்து இருக்கிறார்களோ என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.