பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான படம் டர்போ. மம்முட்டியை வைத்து ஏற்கனவே போக்கிரி ராஜா, மதுர ராஜா என இரண்டு படங்களை இயக்கிய புலி முருகன் இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியிருந்தார். அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி இருந்தாலும் கமர்சியலாக மிகப்பெரிய வரவேற்பை பெற தவறியது. இந்த படத்தில் ஆச்சரியமாக நடிகர் விஜய்சேதுபதி தனது குரல் மூலம் படத்தின் க்ளைமாக்ஸில் பங்களிப்பு செய்திருந்தார்.
அதாவது படம் முடிந்து விட்டது என்று நினைக்கும் நிலையில் இரண்டாம் பாகமும் இருக்கிறது என்று சொல்லும் விதமாக பின்னணியில் ஒலிக்கும் குரல் விஜய்சேதுபதியுடைய குரல் தான். இந்த நிலையில் படத்தில் அவரது பங்களிப்பிற்கு நடிகர் மம்முட்டி தனது நன்றியை தெரிவித்துள்ளதுடன் தாங்கள் இருவரும் இணைந்து இருப்பது போன்று டர்போ படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.