ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர், மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களாகவே படம் இயக்கும் எண்ணம் அவரது மனதில் இருந்தது. அதற்கு உயிர் கொடுக்கும் விதமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு 'பரோஸ்' என்கிற வரலாற்று படத்தை இயக்கத் துவங்கினார் மோகன்லால். இதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் மோகன்லால். அவருக்கு இயக்குனர் சங்க உறுப்பினர் அட்டை தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர் எந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் அதை பகிர்ந்து கொள்வாரோ அதே மகிழ்ச்சியுடன் தனது உறுப்பினர் அட்டையை சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் மோகன்லால்.