ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வளர்ந்து வரும் இளம் கன்னட நடிகை சோனு கவுடா. சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதோடு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் பாலோயர்களை வைத்திருப்பவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார்.
சமீபத்தில் எட்டு வயது சிறுமியை தத்தெடுத்திருப்பதாக அறிவித்த சோனு கவுடா அந்த சிறுமியுடன் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அவர் சட்டவிரோதமாக அந்த சிறுமியை தத்தெடுத்திருப்பதாக கர்நாடக மாநில குழந்தைகள் நலத்துறை சார்பில் பெங்களூருவில் உள்ள படரஹள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறுமியை பெற்றோரிடம் இருந்து பணம் கொடுத்து அவர் வாங்கி இருப்பதாகவும் பள்ளிக்கு செல்லும் வயதில் அவரை வீட்டு வேலை செய்ய பயன்படுத்துவதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனு கவுடாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சோனு கவுடாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் சோனு அடைக்கப்பட்டார். சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.