இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக மாறிய பிறகு அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக குறைந்துவிட்டது. அந்த வகையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த சலார் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக அவர் கடந்த சில வருடங்களாகவே தனது கடும் உழைப்பை கொடுத்து நடித்துள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் ஒரு வழியாக வரும் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் சலார் படத்தில் நடித்த சமயத்திலேயே பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து படே மியான் சோட்டே மியான் என்கிற படத்தில் வில்லனாக நடித்து வந்தார் பிரித்விராஜ். தற்போது இந்த படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளதுடன் ஆடு ஜீவிதம் வெளியாகும் அதே ஏப்ரல் பத்தாம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் பிரித்விராஜின் மாறுபட்ட நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.