பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதை ஏற்கனவே 'யாத்ரா' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. அவரது கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்து இருந்தார். ராஜசேகர ரெட்டி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆந்திரா முழுவதும் நடை பயணம் சென்றார். இதனை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் 'யாத்ரா 2' என்ற பெயரில் தயாராகிறது.
இந்த பாகத்தில் ராஜசேகர ரெட்டியின் மகனும், தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த படத்தில் சோனியா தொடர்பான காட்சிகளும் இடம் பெறுகின்றன. சோனியா வேடத்தில் ஜெர்மனி நடிகை சுஜானே பெர்னட் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளதோடு சோனியா தோற்றத்தில் இருக்கும் அவரது படத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் வீ.ராகவ் கூறும்போது, “ஜெகன் மோகன் ரெட்டி மக்கள் தலைவராக வளர்ந்ததையும், 2009 முதல் 2019 வரை ஆந்திராவில் நடந்த அரசியல் சம்பவங்களையும் யாத்ரா 2 படத்தில் காட்சிப்படுத்துகிறோம். ஜெகன் மோகன் ரெட்டி மீது சோனியா தனிப்பட்ட அன்பு வைத்திருந்தார். அது இந்த படத்தில் இடம்பெறுகிறது. இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும்” என்றார்.