சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரையுலகை பொருத்தவரை சமீப காலமாக வியாபார எல்லையில் விரிவாக்கம் அடைந்துள்ளதுடன் வசூலிலும் மிகப்பெரிய இலக்கை எட்டிப்பிடிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் வெளியான ‛2018' திரைப்படம் 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்த முதல் மலையாள படம் என்கிற பெயரை பெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஆர்.டி.எஸ் என்கிற திரைப்படம் சமீபத்தில் தான் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இத்தனைக்கும் இந்த படம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் நடிப்பில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரம் மம்முட்டி நடிப்பில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. முதல் நாளிலிருந்து வரவேற்பை பெற்ற இந்தப்படம் ஒரு வாரத்திற்குள்ளாகவே தற்போது 50 கோடி வசூலை எளிதாக கடந்துள்ளது. இதற்கு முந்தைய மம்முட்டியின் சில படங்கள் போட்ட முதலீட்டை எடுப்பதற்கே போராடி வந்த நிலையில் கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் வசூல் சாதனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ள இந்த படம் கிட்டத்தட்ட தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் போல வட மாநில குற்றவாளிகளை தேடிச் சென்று வேட்டையாடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையாக உருவாகி இருக்கிறது. படம் விறுவிறுப்பாக இருப்பதால் தற்போது கூட பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.