லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாள திரையுலகை பொருத்தவரை சமீப காலமாக வியாபார எல்லையில் விரிவாக்கம் அடைந்துள்ளதுடன் வசூலிலும் மிகப்பெரிய இலக்கை எட்டிப்பிடிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் வெளியான ‛2018' திரைப்படம் 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்த முதல் மலையாள படம் என்கிற பெயரை பெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஆர்.டி.எஸ் என்கிற திரைப்படம் சமீபத்தில் தான் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இத்தனைக்கும் இந்த படம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் நடிப்பில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த வாரம் மம்முட்டி நடிப்பில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. முதல் நாளிலிருந்து வரவேற்பை பெற்ற இந்தப்படம் ஒரு வாரத்திற்குள்ளாகவே தற்போது 50 கோடி வசூலை எளிதாக கடந்துள்ளது. இதற்கு முந்தைய மம்முட்டியின் சில படங்கள் போட்ட முதலீட்டை எடுப்பதற்கே போராடி வந்த நிலையில் கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் வசூல் சாதனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ள இந்த படம் கிட்டத்தட்ட தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் போல வட மாநில குற்றவாளிகளை தேடிச் சென்று வேட்டையாடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையாக உருவாகி இருக்கிறது. படம் விறுவிறுப்பாக இருப்பதால் தற்போது கூட பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.