ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மம்முட்டி நடிப்பில் கடந்த வாரம் மலையாளத்தில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளரும் அறிமுக இயக்குனருமான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். கேரளாவில் குற்றம் செய்துவிட்டு வட மாநிலங்களில் சென்று ஒளிந்து கொண்ட ஒரு குற்றவாளியை தேடி ஒரு போலீஸ் அதிகாரி தனது சகாக்கள் சிலருடன் நடத்தும் தேடுதல் வேட்டையாக இந்த படம் உருவாகி இருந்தது. போலீஸ் அதிகாரியாக மம்மூட்டி நடித்திருந்தார்.
அப்படி அந்த குற்றவாளியை தேடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவர்கள் முகாமிட்டிருக்கும் போது திக்ரி என்கிற கிராமத்தில் உள்ள சிலர் மம்முட்டி உள்ளிட்ட குழுவினர் மீது அதிரடி தாக்குதல் நடத்துவார்கள். அப்படி தாக்கும் அந்த கூட்டத்தில் இளம்பெண் ஒருவரும் இருந்தார். படத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சண்டைக்காட்சியில் நடித்ததின் மூலம் குறிப்பாக மம்முட்டியுடன் தாக்குதல் நடத்தியதன் வாயிலாக பிரபலமாகியுள்ளார் நடிகை கேத்தரின் மரியா என்பவர்.
இதற்கு முன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஒரு கதாநாயகியின் தோழியாக இவர் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை தெரிந்த பெண் வேண்டும் என படக்குழுவினர் ஆடிஷன் வைத்தபோது அதில் தேர்வானார் கேத்தரின் மரியா. இந்த சண்டைக்காட்சியை படமாக்கியபோது அவர் வட மாநில பெண் போல மேக்கப் போட்டிருந்ததால் நடிகர் மம்முட்டியே, அவரை வட மாநில பெண் என்றே நினைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாராம். அதன்பிறகு தான் அவர் மலையாளி என தெரியவர ஆச்சரியப்பட்டாராம் மம்முட்டி.