ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மம்முட்டி நடிப்பில் கடந்த வாரம் மலையாளத்தில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளரும் அறிமுக இயக்குனருமான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். கேரளாவில் குற்றம் செய்துவிட்டு வட மாநிலங்களில் சென்று ஒளிந்து கொண்ட ஒரு குற்றவாளியை தேடி ஒரு போலீஸ் அதிகாரி தனது சகாக்கள் சிலருடன் நடத்தும் தேடுதல் வேட்டையாக இந்த படம் உருவாகி இருந்தது. போலீஸ் அதிகாரியாக மம்மூட்டி நடித்திருந்தார்.
அப்படி அந்த குற்றவாளியை தேடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவர்கள் முகாமிட்டிருக்கும் போது திக்ரி என்கிற கிராமத்தில் உள்ள சிலர் மம்முட்டி உள்ளிட்ட குழுவினர் மீது அதிரடி தாக்குதல் நடத்துவார்கள். அப்படி தாக்கும் அந்த கூட்டத்தில் இளம்பெண் ஒருவரும் இருந்தார். படத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சண்டைக்காட்சியில் நடித்ததின் மூலம் குறிப்பாக மம்முட்டியுடன் தாக்குதல் நடத்தியதன் வாயிலாக பிரபலமாகியுள்ளார் நடிகை கேத்தரின் மரியா என்பவர்.
இதற்கு முன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஒரு கதாநாயகியின் தோழியாக இவர் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை தெரிந்த பெண் வேண்டும் என படக்குழுவினர் ஆடிஷன் வைத்தபோது அதில் தேர்வானார் கேத்தரின் மரியா. இந்த சண்டைக்காட்சியை படமாக்கியபோது அவர் வட மாநில பெண் போல மேக்கப் போட்டிருந்ததால் நடிகர் மம்முட்டியே, அவரை வட மாநில பெண் என்றே நினைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாராம். அதன்பிறகு தான் அவர் மலையாளி என தெரியவர ஆச்சரியப்பட்டாராம் மம்முட்டி.