நானியை சந்தித்த 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் | ‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் |
மம்முட்டி நடிப்பில் கடந்த வாரம் மலையாளத்தில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளரும் அறிமுக இயக்குனருமான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். கேரளாவில் குற்றம் செய்துவிட்டு வட மாநிலங்களில் சென்று ஒளிந்து கொண்ட ஒரு குற்றவாளியை தேடி ஒரு போலீஸ் அதிகாரி தனது சகாக்கள் சிலருடன் நடத்தும் தேடுதல் வேட்டையாக இந்த படம் உருவாகி இருந்தது. போலீஸ் அதிகாரியாக மம்மூட்டி நடித்திருந்தார்.
அப்படி அந்த குற்றவாளியை தேடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவர்கள் முகாமிட்டிருக்கும் போது திக்ரி என்கிற கிராமத்தில் உள்ள சிலர் மம்முட்டி உள்ளிட்ட குழுவினர் மீது அதிரடி தாக்குதல் நடத்துவார்கள். அப்படி தாக்கும் அந்த கூட்டத்தில் இளம்பெண் ஒருவரும் இருந்தார். படத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சண்டைக்காட்சியில் நடித்ததின் மூலம் குறிப்பாக மம்முட்டியுடன் தாக்குதல் நடத்தியதன் வாயிலாக பிரபலமாகியுள்ளார் நடிகை கேத்தரின் மரியா என்பவர்.
இதற்கு முன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஒரு கதாநாயகியின் தோழியாக இவர் நடித்துள்ளார். இந்த படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை தெரிந்த பெண் வேண்டும் என படக்குழுவினர் ஆடிஷன் வைத்தபோது அதில் தேர்வானார் கேத்தரின் மரியா. இந்த சண்டைக்காட்சியை படமாக்கியபோது அவர் வட மாநில பெண் போல மேக்கப் போட்டிருந்ததால் நடிகர் மம்முட்டியே, அவரை வட மாநில பெண் என்றே நினைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாராம். அதன்பிறகு தான் அவர் மலையாளி என தெரியவர ஆச்சரியப்பட்டாராம் மம்முட்டி.