மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பின்னர் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் செலெக்ட்டிவான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாரூக்கானின் அதிரடி பெண்கள் படையின் தலைவியாக ஆக்ஷன் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இவரது நடிப்பிற்கு பாராட்டுக்களும் குவிந்தன. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் ஐந்தாவதாக உருவாகி வரும் நேரு என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரியாமணி.
தற்போது நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஜீத்து ஜோசப்பின் முந்தைய திரில்லர் படங்களைப் போல அல்லாமல் இந்த படம் ஒரு நீதிமன்ற டிராமாவாக உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2011ல் வெளியான கிராண்ட் மாஸ்டர் என்கிற படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடித்திருந்தார் பிரியாமணி. அந்த வகையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.