ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பின்னர் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் செலெக்ட்டிவான படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாரூக்கானின் அதிரடி பெண்கள் படையின் தலைவியாக ஆக்ஷன் ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இவரது நடிப்பிற்கு பாராட்டுக்களும் குவிந்தன. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் ஐந்தாவதாக உருவாகி வரும் நேரு என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரியாமணி.
தற்போது நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஜீத்து ஜோசப்பின் முந்தைய திரில்லர் படங்களைப் போல அல்லாமல் இந்த படம் ஒரு நீதிமன்ற டிராமாவாக உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2011ல் வெளியான கிராண்ட் மாஸ்டர் என்கிற படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடித்திருந்தார் பிரியாமணி. அந்த வகையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.