ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
கேரளாவின் முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் எய்திய நிலையில் அவரது உடல் அங்கிருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது உடலை பெற்று அவரது இல்லத்திற்கு கொண்டு செல்வதற்காக வந்திருந்தவர்களில் நடிகர் குஞ்சாக்கோ போபனும் ஒருவர்.
இந்த நிலையில் தற்போது உம்மன் சாண்டியின் மறைவு குறித்து குஞ்சாக்கோ போபன் கூறும்போது, "அவரது மறைவு எனக்கு பெர்சனல் ஆக மிகப்பெரிய இழப்பு" என்று கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “நான் இங்கே அவரது உடலை பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்றால் அவருடன் எனக்கு நீண்ட காலமாக பழக்கம் இருந்து வருகிறது. அவருடைய குடும்பத்தில் ஒருவனாகவே நான் பழகி வந்திருக்கிறேன். என்னுடைய வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் அவர் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல அவரது வீட்டிற்கு எந்த நேரத்திலும் நான் வந்து செல்லும் சுதந்திரத்தையும் அளித்திருந்தார்.
நான் பார்த்த எளிமையான மக்கள் தலைவர்களில் முதன்மையானவர் உம்மன் சாண்டி. ஒருநாள் நள்ளிரவு அவரது வீட்டிற்கு சென்றபோது கூட மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டும் அருகில் இருந்த அதிகாரிகளிடம் பேசிக்கொண்டும் இருந்தார். அப்படிப்பட்டவரின் இழப்பு எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை பேரிழப்பு தான்” என்று தனது சோகத்தை வெளிப்படுத்தினார் குஞ்சாக்கோ கோபன்.