சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மலையாள திரையுலகில் இப்போதும் பிஸியாக படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் வெகு சில சீனியர் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு. தற்போது மோகன்லால் நடிப்பில் ‛ஹிருதயபூர்வம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஆக.,28 (இன்று) இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியான போது அதில் நடிகர் பஹத் பாசிலின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் பஹத் பாசில் குறித்து நடிகர் சத்யன் அந்திக்காடு கூறும்போது, “அவரை வைத்து நான் ஒரு இந்தியன் பிரணயகதா, ஞான் பிரகாசம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளேன். நானும் அவரது தந்தையும் (இயக்குனர் பாசில்) சமகாலத்து இயக்குனர்கள் என்பதால் என்னை ஆரம்பத்தில் அங்கிள் என்று தான் கூப்பிடுவார். ஆனால் என்னுடன் படத்தில் பணியாற்றிய துவங்கியபோது என்னை ஏட்டா (அண்ணன்) என்று இயல்பாக கூப்பிட துவங்கி விட்டார். அப்போது இருந்து எங்களுக்கு இடையே இருந்த அந்த வயது வித்தியாசம் காணாமல் போய்விட்டது. அதனால் அவருடன் எதையும் சகஜமாக பேசி வேலை வாங்க முடிந்தது” என்று கூறியுள்ளார்.




