300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கூகுள் நிறுவனத்தின் முகப்பு பக்கம் உலக புகழ்பெற்றது. அந்த பக்கத்தில் இடம்பெறும் டூடுல் மிகவும் கவனிக்கப்படும். உலகில் பல்வேறு துறையில் சிறந்தவர்களை இந்த டூடுல் மூலம் கூகுள் கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று மலையாள சினிமாவின் முதல் நாயகியான பி.கே.ரோஸியின் படத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது. ரோஸியின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த டூடுலை வெளியிட்டுள்ளது.
யார் இந்த ரோஸி?
இந்தியாவுக்குள் சினிமா வருவதற்கு முன்பு நாடகங்கள்தான் மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. பெண்கள் நடிக்க மாட்டார்கள். நடிக்க அனுமதியும் இல்லை. ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்தார்கள். சினிமா அறிமுகமானபோதும் இதே நிலைதான் இருந்தது. மலையாள சினிமாவின் முதல் இயக்குனரான ஜே.சி.டேனியல் மலையாளத்தின் முதல் படமான 'விகதகுமாரன்' என்ற படத்தை இயக்கினார். இது மவுனப்படம். 1930ம் ஆண்டு வெளிவந்தது.
இந்த படம் ஒரு நாயர் குடும்பத்து பெண்ணை மையாக கொண்டது. அந்த பெண்ணாக நடித்தவர் பி.கே.ரோஸி. 'காக்கராஷி' என்ற தமிழ் நாடகத்தில் நடித்து வந்த ரோஸியை ஜே.சி.டேனியல் கண்டுபிடித்து இதில் நடிக்க வைத்தார்.
ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ரோஸி நாயர் பெண்ணாக நடிப்பதா என்று பெரும் சர்ச்சை எழுந்தது. படத்தை வெளியிடவிடாமல் தடுத்தார்கள். படம் பார்க்க வந்தவர்களை அடித்து விரட்டினார்கள். எதிர்ப்புகளை மீறி முதல் நடிகையாக மலையாள சினிமாவில் கால்பதித்தவர் ரோஸி.
அதன்பிறகு சில படங்களில் நடித்தவர் புதிய நாயகிகள் புறப்பட்டு வரவும் சினிமாவை விட்டு விலகினார். கேசவ பிள்ளை என்ற லாரி டிரைவரை மணந்து கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் வறுமையுடன் வாழ்ந்து 1988ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது நினைவாக கேரள பெண் திரைப்பட கலைஞர்கள் பி.கே.ரோஸி கேசவப்பிள்ளை பிலிம் சொசைட்டி என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.