பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
முன்னணி மலையாள நடிகர் உன்னி முகுந்தன். சமீபத்தில் வெளியான மாளிகப்புரம் படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இந்த படம் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த வெற்றி மகிழ்ச்சியில் இருந்த உன்னிமுகுந்தனுக்கு இப்போது சிக்கல் வந்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஒரு இளம் பெண் உன்னிமுகுந்தன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்தார். தன்னை கதை விவாதத்துக்கு வருமாறு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் வழக்கின் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நடந்போது உன்னிமுகுந்தன் வழக்கறிஞர் இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக் கொள்கிறோம் என்று பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.
இந்த நிலையில் உன்னி முகுந்தன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த பெண் மீண்டும் கோர்ட்டில் நேரடியாக ஆஜராகி “தன்னுடன் எந்த சமரச பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எந்த சமரச ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. எனவே வழக்கை தொடர்ந்த நடத்த வேண்டும்” என்று புதிய மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு விதித்திருந்த தடையை நீக்கியதோடு, உன்னி முகுந்தனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை வருகிற 17ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.