ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான அதே நாளில் கன்னடத்தில் வெளியான படம் தான் காந்தாரா. சிறிய படம் என்கிற அளவில் வெளியான இந்தப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார். படம் வெளியானபின் தென்னிந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கவனம் ஈர்த்த இந்த படத்தின் வெற்றி ரிஷப் ஷெட்டியை மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் இருந்து அவருக்கு நடிக்க அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரிஷப் ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி. அதுமட்டுமல்ல அடுத்தது தான் நடிக்க இருப்பது கன்னட திரைப்படம் தான் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு காந்தாரா படத்தின் தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என கூறியிருந்தார். அதேசமயம் காந்தாரா 2 உடனடியாக துவங்கப்பட போவதில்லை என்றும் வேறு ஒரு கன்னட படத்தில் தான் ரிஷப் ஷெட்டி, நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.