நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான அதே நாளில் கன்னடத்தில் வெளியான படம் தான் காந்தாரா. சிறிய படம் என்கிற அளவில் வெளியான இந்தப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார். படம் வெளியானபின் தென்னிந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கவனம் ஈர்த்த இந்த படத்தின் வெற்றி ரிஷப் ஷெட்டியை மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் இருந்து அவருக்கு நடிக்க அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரிஷப் ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி. அதுமட்டுமல்ல அடுத்தது தான் நடிக்க இருப்பது கன்னட திரைப்படம் தான் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு காந்தாரா படத்தின் தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என கூறியிருந்தார். அதேசமயம் காந்தாரா 2 உடனடியாக துவங்கப்பட போவதில்லை என்றும் வேறு ஒரு கன்னட படத்தில் தான் ரிஷப் ஷெட்டி, நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.