நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த ரோஷாக் என்கிற திரைப்படம் வெளியானது. சைக்காலஜிக்கல் திரில்லர் ஆக உருவாகியிருந்த இந்த படத்தில் தனது கர்ப்பிணி மனைவியின் இறப்புக்கு காரணமானவர்களை வித்தியாசமான முறையில் எப்படி மம்முட்டி பழிவாங்குகிறார் என்பதை மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்த படத்தை நிஜாம் பஷீர் என்பவர் இயக்கியிருந்தார். மம்முட்டியே இந்த படத்தை தயாரித்து இருந்தார். அவரது மகன் துல்கர் சல்மான் இந்த படத்தை தனது வே பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக வெளியிட்டிருந்தார்.
படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் வரவேற்பையும் அதே சமயம் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த படத்தில் பணியாற்றிய குழுவினருக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் மம்முட்டியும் துல்கர் சல்மானும். மேலும் இந்த படத்தில் தனது உருவத்தையே காட்டாமல் முகமூடி அணிந்தபடி கண்களால் நடித்த நடிகர் ஆசிப் அலிக்கும் தங்களது நன்றியை தெரிவித்து பரிசு வழங்கினர்.