இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
மலையாள திரையுலகில் ஹேப்பி வெட்டிங், ஒரு அடார் லவ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ஒமர் லுலு. புருவ அழகி என்கிற பெயரில் பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை அறிமுகம் செய்தவர் இவர்தான். இந்த நிலையில் தற்போது இவர் நல்ல சமயம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷகிலா நடித்துள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 25ம் தேதி வெளியாவதை தொடர்ந்து இதன் புரமோசன் நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள ஹை லைட் என்கிற மாலில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் மால் நிர்வாகத்தினர் இந்த நிகழ்ச்சியில் ஷகிலாவின் வருகையை அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டனர். காரணம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிவின்பாலி நடித்த சாட்டர்டே நைட் என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இதே மாலில் நடந்தபோது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட இரண்டு நடிகைகளிடம் ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் அத்துமீறிய நிகழ்வு நடந்து அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஷகிலாவை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் அவர் இல்லாமல் நீங்கள் நிகழ்ச்சியை நடத்தலாம் என்றும் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால் ஷகிலா இல்லாமல் இந்த விழாவை நடத்த விரும்பாத ஒமர் லுலு இந்த புரமோசன் நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிட்டார். அது மட்டுமல்ல ஷகிலாவுடன் இணைந்து இதுகுறித்து பேசி அவரிடம் வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ஒமர் லுலு.
இந்த வீடியோவில் ஷகிலா பேசும்போது, “இதுபோன்று பல நிகழ்வுகளை நான் கடந்தகாலத்தில் எதிர்கொண்டு உள்ளேன். நான் இந்த விழாவிற்காக கோழிக்கோடு வருகிறேன் என்கிற செய்தி வெளியானபோது பல வெறுப்பான கருத்துக்கள் மூலம் என்னை காயப்படுத்த ஆரம்பித்தனர். இந்த நிலைக்கு என்னை தள்ளியது நீங்கள் அனைவரும் தான். இன்னும் என்னை ஏன் அங்கீகரிக்க மறுக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.