தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் ‛குட் பேட் அக்லி'. இந்த படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக பதிவாகி வருகிறது. மேலும், தமிழகத்தில் அதிகாலை 4 மணி மற்றும் காலை 7.30 மணி காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டு வருகிறது.
அதேசமயம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் இதுபோன்று அண்டை மாநிலங்களில் முன்கூட்டியே காட்சிகள் திரையிடப்பட்டால், ஒருவேளை தமிழகத்தில் படம் திரையிடுவதற்கு முன்பே சோசியல் மீடியாவில் யாரேனும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி விட்டால், அது படத்தின் வசூலை பாதிக்கும். அதன் காரணமாகவே தமிழகத்தில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட இருப்பதால், இதே காலை 9 மணிக்குதான் மற்ற அண்டை மாநிலங்களிலும் முதல் காட்சியை திரையிடுவதற்கு அப்படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.