காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் ‛குட் பேட் அக்லி'. இந்த படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக பதிவாகி வருகிறது. மேலும், தமிழகத்தில் அதிகாலை 4 மணி மற்றும் காலை 7.30 மணி காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டு வருகிறது.
அதேசமயம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் இதுபோன்று அண்டை மாநிலங்களில் முன்கூட்டியே காட்சிகள் திரையிடப்பட்டால், ஒருவேளை தமிழகத்தில் படம் திரையிடுவதற்கு முன்பே சோசியல் மீடியாவில் யாரேனும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி விட்டால், அது படத்தின் வசூலை பாதிக்கும். அதன் காரணமாகவே தமிழகத்தில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட இருப்பதால், இதே காலை 9 மணிக்குதான் மற்ற அண்டை மாநிலங்களிலும் முதல் காட்சியை திரையிடுவதற்கு அப்படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.