பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் |
நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துரைத்து, சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தவர்தான் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன். இவரது நகைச்சுவைக் காட்சிகள் என்பது பார்க்கும் பார்வையாளர்களாகிய ரசிகர்களுக்கு வாழ்வியலை கற்பித்துத் தந்த ஒரு கலைப் பெட்டகமாகத்தான் இருந்தும் வந்தது. இவரை நகைச்சுவை நடிகர் என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது.
சிரிப்பென்ற உளி கொண்டு, மக்கள் சிந்தனையை செதுக்கி செம்மைப் படுத்திய ஒரு சிந்தனையாளர். மடை திறந்த வெள்ளமென கருத்துக்களை வழங்குவதில் மட்டும் தனது தயாள குணத்தைக் காட்டாமல், தனது சொந்த வாழ்வில் பலருக்கு பணத்தை வாரி வழங்கியிருக்கும் வள்ளல் தன்மையும் கொண்ட ஒரு பண்பட்ட மனிதராகவே வாழ்ந்தவர் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன்.
'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன், தன்னை நாடி வரும் பட வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நடித்து வந்த ஒரு கலைஞனாக என்றும் இருந்ததில்லை. முதலில் கதையைக் கேட்பார், அதில் தனக்குரிய வேடம் இருந்தால் மட்டுமே ஒத்துக் கொண்டு செயல்படுவது அவரது இயல்பாக இருந்தது. சில படங்களில் தனியாகவே நகைச்சுவைப் பகுதிகளை அவரே தயாரித்து நடித்துக் கொடுப்பதும் உண்டு. படம் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது ஒரே சிந்தனை. ஓடாத படம் என நினைத்து சில தயாரிப்பாளர்கள் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணனை நாடி வந்ததும் உண்டு.
இவர் நகைச்சுவைப் பகுதியை தனியாக தயாரித்து, அந்தப் படத்தில் ஒட்ட வைத்து ஓட வைத்த அற்புத நிகழ்வுகளும் நடந்ததுண்டு. இதனால் “பிலிம் ரிப்பேரர்” என்று சினிமா வட்டாரத்தில் என் எஸ் கிருஷ்ணனை அழைத்தும் வந்தனர். 1948ம் ஆண்டு வெளிவந்தது “தேவதாஸி” என்ற திரைப்படம். என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம் தம்பதியர் இத்திரைப்படத்தில் நடித்தும் இருந்தனர்.
சென்னை 'பாரகன்' திரையரங்கிற்குச் சென்று படத்தைப் பார்த்து வந்த என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம் தம்பதியர், வீடு திரும்பியதும் படத்தின் தயாரிப்பாளரை அழைத்து, நான் நடித்தும் உன் படம் சரியாக போகவில்லை. தப்பு என்னுடையதுதான். இந்தா படத்தில் நடித்ததற்காக எங்களுக்கு நீ கொடுத்த சம்பளம் என்று சொல்லி, வாங்கிய முழுத் தொகையையும் தயாரிப்பாளரிடம் எடுத்துக் கொடுத்தனுப்பியவர்தான் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன்.