துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர் 92 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நான்கு வருட செவிலியர் படிப்பை படிக்க விரும்பினார். ஆனால் அவருக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு வசதி வாய்ப்பு இல்லை. அவரது தந்தையும் கொரோனா காலகட்டத்தில் காலமாகிவிட்டார். அதை தொடர்ந்து நேரடியாக ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜாவை நேரில் சந்தித்து இதுகுறித்து தனக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார். கலெக்டர் கிருஷ்ண தேஜா அந்த மாணவியின் கண்களில் தெரிந்த உறுதியையும் நம்பிக்கையையும் பார்த்து 'வி ஆர் பார் ஆலப்பி ப்ராஜெக்ட்' என்கிற திட்டத்தின் கீழ் அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தார்.
அதன்படி பல கல்லூரிகளில் விசாரித்ததில் ஒரு தனியார் கல்லூரியில் அவருக்கு இடம் கொடுக்க முன்வந்தார்கள். அதேசமயம் படிப்பு செலவை ஏற்றுக்கொள்ள ஒரு ஸ்பான்ஸர் தேவை என்கிற நிலை வந்தபோது கலெக்டர் கிருஷ்ண தேஜா ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தகவல் தெரிவித்தார்.
அதை கேட்டதும் அல்லு அர்ஜுன் மறுநிமிடமே அந்த மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொள்வதாக கூறிவிட்டாராம். அதுமட்டுமல்ல ஒரு வருட செலவை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்படி கலெக்டர் கோரிக்கை வைத்த நிலையில் அந்த மாணவியின் நான்கு வருட படிப்பு செலவு, விடுதியில் தங்கும் செலவு உள்ளிட்ட அனைத்தையுமே தான் ஏற்றுக்கொள்வதாக பெருந்தன்மையுடன் கூறிவிட்டாராம்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் விரிவாக பதிவிட்டு அல்லு அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்துள்ள கலெக்டர் கிருஷ்ண தேஜா, அந்த மாணவி நிச்சயம் நன்றாக படித்து ஒரு செவிலியர் ஆக மாறி தனது குடும்பத்தை மட்டும் அல்ல இந்த சமூகத்திற்கு நிச்சயம் நல்லது செய்வார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர்களை பொறுத்தவரை கேரளாவில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். ஒரு மாணவியின் படிப்புக்கு உதவும் அவரது இந்த நல்ல குணத்தை அவரது கேரள ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாராட்டி வருகின்றனர்.