சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் மவுனி ராய் | படித்த கல்லூரியிலேயே பாடமானது மம்முட்டி வரலாறு | பிளாஷ்பேக்: ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்த நடிகர் | பிளாஷ்பேக்: சினிமாவான துப்பறியும் நாவல் | பிரியதர்ஷன், அக்ஷய் குமார் படத்தில் விலகிய நடிகர் மீண்டும் இணைந்தார் | மம்முட்டியை விட கிரேஸ் ஆண்டனிக்கு கதை சொல்ல தான் அதிக நேரம் பிடித்தது : இயக்குனர் ராம் | இயக்குனர் ரஞ்சித் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்த கர்நாடக நீதிமன்றம் | பிரேமலு இயக்குனரின் படத்தில் இணைந்த நிவின்பாலி, மமிதா பைஜூ : பஹத் பாசில் தயாரிக்கிறார் | என் படத்திற்கு ‛ஜானகி' டைட்டிலை அனுமதித்த சென்சார், சுரேஷ்கோபி படத்தை எதிர்ப்பது ஏன்? இயக்குனர் ஆதங்கம் | சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி |
ஆந்திராவின் குண்டூரில் உள்ள இப்டாம் எனும் கிராமத்தில் உள்ள சில வீடுகள் சாலை விரிவாகத்திற்காக இடிக்கப்பட்டது. இவர்கள் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேவா கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல பவன் கல்யாண் தொண்டர்கள் புடைசூழ சென்றார். அவர் சென்ற விதம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தனது காரில் அவர் மேற்கூரையில் அமர்ந்தபடி . சாவகாசமாக கால்களை நீட்டி உட்கார்ந்தபடி சென்று கொண்டிருந்தார். அவரது காரில் அவருடைய கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று கொண்டிருந்தனர். அவர்களும் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டே நின்றிருந்தனர். டிரோன் கேமரா பதிவு, வீடியோகிராபர், போட்டோகிராபர் புடைச் சூழ பவன் பயணித்திருக்கிறார்.
தெலுங்கு படத்தின் வில்லன்கள் பாணியில் அவர் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீது சாலை விதிகளை மீறியது தொடர்பான வழக்கு தொடர ஆந்திர போலீசார் முடிவு செய்துள்ளனர்.