‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் | ரயில் பைட், ஆட்டமா தேரோட்டமா... : ‛கேப்டன் பிரபாகரன்' மலரும் நினைவில் ஆர்.கே.செல்வமணி | 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் ரத்தாகுமா ? | 'கேப்டன் பிரபாகரன்' காட்சியைக் காப்பியடித்த 'புஷ்பா 2' | ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமா... : கோலிவுட் தகவல் என்ன...? | 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ‛சாம்ராஜ்யம்' |
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது தனது புதிய படமான ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே யாரோ சில மர்ம நபர்கள் பவன் கல்யாணை பின் தொடர்ந்து நோட்டம் பார்த்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜூபிலி ஹில்சில் உள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு வந்த இருவர் அவரது பாதுகாவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதையடுத்து ஐதராபாத் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பவன் கல்யாணின் வாகனத்தை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வருகிறார்களாம். அதன் காரணமாக இது குறித்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி சார்பில் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்கள். மேலும் ஆந்திர அரசுக்கு எதிராக விஜயவாடாவில் பவன் கல்யாண் ஆற்றிய உரை அங்குள்ள மீடியாக்களில் தலைப்பு செய்தியாக இடம் பிடித்துள்ளது. அதன் பிறகுதான் இதுபோன்று மர்ம நபர்கள் அவரைப் பின் தொடர்ந்து நோட்டமிடுவதாகவும் பவன் கல்யாண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.