புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தெலுங்கு சினிமாவில் 2007ல் சிருதா என்ற படத்தில் அறிமுகமானவர். அதையடுத்து ராஜமவுலியின் மகதீராவில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் ரங்கஸ்தலம், ஆர் ஆர் ஆர் என பல முக்கிய படங்களில் நடித்தவர் தற்போது ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் அரசியல் த்ரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 28ம் தேதியான நேற்றோடு திரை உலகில் ராம்சரண் நடிகராகி 15 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். இதையடுத்து திரை உலகினரும், ரசிகர்களும் சோசியல் மீடியாவில் அவரை வாழ்த்தி வருகிறார்கள். சிரஞ்சீவியும் தனது மகன் ராம்சரணை வாழ்த்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛மகதீராவிலிருந்து ரங்கஸ்தலம், ஆர்ஆர்ஆர் இப்போது ஷங்கருடன் ஆர்சி- 15 வரை சரண் எப்படி நடிகராக உருவெடுத்தார் என்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. ராம்சரணின் ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தான் எடுத்துக் கொண்ட பணியில் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம்சரண் மேலும் பல உயரங்களையும் பெருமைகளையும் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார் சிரஞ்சீவி.