பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குனர் ராஜமவுலி தனது பிரம்மாண்ட படைப்புகள் மூலம் தென்னிந்தியா பாலிவுட் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். அதுமட்டுமல்ல இவரது படங்கள் வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளது. ஹாலிவுட்டை சேர்ந்த பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இவரது பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களை பார்த்துவிட்டு பல தருணங்களில் புகழ்ந்து பாராட்டி உள்ளனர்.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள 'பியாண்ட் பெஸ்ட் 2022' திரைப்பட விழா துவங்குகிறது. இந்த விழாவில் இயக்குனர் ராஜமவுலிக்கு கவுரவம் சேர்க்கும் விதமாக கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு என்கிற பிரிவில் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான ஈகா, மகதீரா, பாகுபலி 2 பாகங்கள் மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய திரைப்படங்கள் செப்.,30 முதல் அக்.,11 வரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள பிரம்மாண்ட திரையரங்குகளில் ரசிகர்களுக்காக திரையிடப்பட இருக்கின்றன.
இந்த தகவலை இந்த விழாவை நடத்தும் அமைப்பே அதிகாரப்பூர்வமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளன்று இந்த விழாவில் நேரிலேயே கலந்துகொள்ளும் இயக்குனர் ராஜமவுலி பார்வையாளர்களுடன் கலந்துரையாடவும் இருக்கிறாராம். இது இயக்குனர் ராஜமவுலிக்கு கிடைத்த இன்னொரு மிகப்பெரிய கவுரவம் என்றே சொல்லலாம்.