ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். நேரம், பிரேமம் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய இவர், மலையாளம் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு ரசிகர்களிடையேயும் ரொம்பவே பிரபலமானவர். பிரேமம் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்கு பின் தற்போது மலையாளத்தில் கோல்டு என்கிற தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இந்த படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அதனால் சில நாட்களுக்கு முன்பு, ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக செப்-8ல் இந்தப்படம் வெளியாகும் என்று உறுதியாக கூறிய அல்போன்ஸ் புத்ரன், அதேசமயம் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறியிருந்தார். இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தப்படம் ஓணம் பண்டிகையில் வெளியாகாது என்றும் இன்னும் படத்தின் பணிகள் பாக்கி இருப்பதால் அதற்கு அடுத்த ஒரு வாரம் கழித்து தான் வெளியாகும் என்றும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இதற்காக ரசிகர்கள் தன்னை மன்னிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.