எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மலையாளத்தில் வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு. இவர் இளம் நடிகை ஒருவரை சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த நடிகை போலீசில் புகார் செய்ததை அடுத்து விஜய்பாபு மீது பலாத்கார வழக்கு தொரடப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவான விஜய்பாபு போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பிறகு இப்போது கேரளா திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்யக்கூடாது. போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறி கேரள உயர்நீதி மன்றத்தில் விஜய்பாபு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் 2 நாட்கள் கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து விஜய்பாபு போலீசார் முன் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தனது கைது தடையை நீடிக்க வேண்டும் என்றும் விஜய்பாபு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் போலீசாரும் விஜய்பாபுவிடம் விசாரணை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டிருந்தனர். இரு மனுக்களையும் ஏற்ற நீதிமன்றம் விஜய்பாபுவை வருகிற 7ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. அதோடு விஜய்பாபுவும் வழக்கு தொடர்பான சாட்சிகளையோ, வழக்கு தொடுத்தவரையோ சந்திக்கவும் தடை விதித்தது.