இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில வாரங்களாக மோகன்லால், மம்முட்டி ஆகியோர் நடித்த படங்கள் எல்லாம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின. இதனால் ஓடிடி தளத்தில் வெளியிடலாமா என யோசித்து வந்து மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் எல்லாம் தற்போது தைரியமாக தங்களது படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்து வருகின்றனர்.. அந்தவகையில் இன்று(மே 27) மலையாளத்தில் வெளியாகும் நான்கு படங்களில் குட்டாவும் சிக்ஷையும் மற்றும் ஜான் லூதர் என இரண்டு படங்கள் அதிரடி போலீஸ் கதையாக உருவாகி உள்ளன.
இதில் குட்டாவும் சிக்ஷையும் படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் கம்மட்டிப்பாடம் படத்தின் இயக்குனருமான ராஜீவ் ரவி இயக்கி உள்ளார். இளம் நடிகரான ஆசிப் அலி இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு காக்க காக்க சூர்யாவின் நடிப்பை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
அதேபோல ஜான் லூதர் என்கிற படத்தில் நடிகர் ஜெயசூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவும் ஒரு அதிரடி போலீஸ் கதாபாத்திரம்தான். இந்த படம் ஒரு க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ளது. அபிஜித் ஜோசப் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே சில படங்களில் ஜெயசூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் அவற்றிலிருந்து இந்தப் படமும் கதாபாத்திரமும் மாறுபட்டு இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். அந்த வகையில் இந்த இரண்டு போலீஸ் படங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ளன.