புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் இயக்குனர் அமல் நீரத். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மம்முட்டியை வைத்து பீஷ்ம பர்வம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மார்ச்-3ல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை ரசிகர்கள் தங்கள் மொபைல்போனில் படம் பிடித்து அவற்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இது இயக்குனர் அமல் நீரத்தை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.
உடனே இது குறித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக, 'ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்து என்ஜாய் செய்து ரசியுங்கள், அதேசமயம் தயவுசெய்து யாரும் படக்காட்சிகளை மொபைல் போனில் பதிவு செய்வதோ அவற்றை சோசியல் மீடியாவில் பரப்புவதோ செய்ய வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன்... கொரோனா தாக்கம் நிலவிய இந்த இரண்டு வருட காலத்தில் இந்த படத்தை எடுத்து முடிக்க நாங்கள் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறோம். தயவுசெய்து அதை வீணடித்து விட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.