காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
த்ரிஷ்யம் பட புகழ் ஜீத்து ஜோசப் தற்போது மோகன்லால் நடிக்கும் டுவெல்த் மேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்த உடன் அடுத்து இயக்க இருக்கும் படம் பற்றி அறிவித்துள்ளார். புதிய படத்திற்கு "கூமன்: தி நைட் ரைடர்" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆசிப் அலி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ரெஞ்சி பணிக்கர், பாபுராஜ் மற்றும் ஜாபர் இடுக்கி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
இதுகுறித்து ஜீத்து ஜோசப் கூறியிருப்பதாவது: இது ஒரு புதிய முயற்சியாக உருவாகும் த்ரில்லர் வகை படம். தலைப்பு பற்றி இப்போது விளக்கமாக கூற முடியாது. ஆனால் கதைக்கும், தலைப்புக்கும் சிறப்பான பொருத்தம் இருக்கும். ஆசிப் அலி அவரது கேரியரில் நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கிறார். வருகிற 24ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.
மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனி இடத்தில் அமைந்திருக்கும் ஒரு ரிசார்ட்டில் நடக்கும் இரவு பார்ட்டியின் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படம். என்கிறார்கள்.