காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி |
தெலுங்கில் நானிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்த ஷயாம் சிங்க ராய் படம் கடந்த டிசம்பர் 24ம் தேதி வெளியானது. இந்த படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக சாய்பல்லவி நடிப்பதாக டோலிவுட்டில் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதையடுத்து மீடியாக்கள் சாய்பல்லவியை தொடர்பு கொண்டபோது, ஷ்யாம் சிங்க ராய் படத்திற்குப் பிறகு மாறுபட்ட பல கதைகளை கேட்டு வருவதாகவும், இன்னமும் அடுத்து நடிக்கும் படங்களை முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள சாய்பல்லவி, மகேஷ்பாபு படத்தில் அவருக்கு தங்கையாக தான் நடிப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று அதற்கு ஒரு மறுப்பும் தெரிவித்திருக்கிறார்.