புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கில் நானிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்த ஷயாம் சிங்க ராய் படம் கடந்த டிசம்பர் 24ம் தேதி வெளியானது. இந்த படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக சாய்பல்லவி நடிப்பதாக டோலிவுட்டில் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதையடுத்து மீடியாக்கள் சாய்பல்லவியை தொடர்பு கொண்டபோது, ஷ்யாம் சிங்க ராய் படத்திற்குப் பிறகு மாறுபட்ட பல கதைகளை கேட்டு வருவதாகவும், இன்னமும் அடுத்து நடிக்கும் படங்களை முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள சாய்பல்லவி, மகேஷ்பாபு படத்தில் அவருக்கு தங்கையாக தான் நடிப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று அதற்கு ஒரு மறுப்பும் தெரிவித்திருக்கிறார்.