பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த இரண்டு அலைகளை விட இப்போது பரவ ஆரம்பித்திருக்கும் இந்த மூன்றாவது அலையால் திரையுலகை சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த மூன்றாவது அலையின் வீரியம் குறைவோ என்னவோ, அனைவரும் ஒருசில நாட்களிலேயே நல்லபடியாக குணமாகியும் விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மலையாள நடிகர் மம்முட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடிகர் சுரேஷ்கோபியும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளேன். தற்போது என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டு விட்டேன். கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டவர்கள் தங்களை ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மாதம்தான் தமிழில் தான் நடித்து முடித்துள்ள தமிழரசன் என்கிற படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சுரேஷ்கோபி, கடந்த சில தினங்களுக்கு முன்தான் மலையாளத்தில் தான் நடித்துவரும் பாப்பன் படத்தின் படப்பிடிப்பையும் முடித்தார்.