ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கடந்த இரண்டு அலைகளை விட இப்போது பரவ ஆரம்பித்திருக்கும் இந்த மூன்றாவது அலையால் திரையுலகை சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த மூன்றாவது அலையின் வீரியம் குறைவோ என்னவோ, அனைவரும் ஒருசில நாட்களிலேயே நல்லபடியாக குணமாகியும் விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மலையாள நடிகர் மம்முட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடிகர் சுரேஷ்கோபியும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளேன். தற்போது என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டு விட்டேன். கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டவர்கள் தங்களை ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மாதம்தான் தமிழில் தான் நடித்து முடித்துள்ள தமிழரசன் என்கிற படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சுரேஷ்கோபி, கடந்த சில தினங்களுக்கு முன்தான் மலையாளத்தில் தான் நடித்துவரும் பாப்பன் படத்தின் படப்பிடிப்பையும் முடித்தார்.




