லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தென்னிந்திய மாநிலங்களில் தெலுங்கிற்கு அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் ரசிகர்கள் கேரளாவில் தான் இருக்கின்றனர். சொல்லப்போனால் கேரளாவில் செல்வாக்கு பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் இன்று (டிச-17) வெளியாகிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் புஷ்பா படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பேசும்போது இந்த படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சி ஒன்றை கேரளாவில் படமாக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கோவிட் காரணமாக எங்களால் இங்கே வந்து படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இது படக்குழுவினரை விட எனக்கு ரொம்பவே வருத்தம் தந்தது என்று கூறியுள்ளார்.