மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இந்திய அளவிலேயே ஒரு படத்திற்கு ஐந்தாம் பாகம் உருவாகிறது என்றால் அது மலையாளத்தில் மம்முட்டி நடித்த சிபிஐ டைரி குறிப்பு படத்திற்குத்தான். இதுவரை இந்தப்படத்திற்கு நான்கு பாகங்கள் வெளியாகிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து இதன் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கேரளாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகை ஷோபனா விசிட் அடித்துள்ளார். மேலும் மம்முட்டியுடன் அங்கே எடுத்துக்கொண்ட செல்பியை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள ஷோபனா “ஒரு ரசிகையாக எங்கள் கேப்டனை பார்க்க வந்தேன்” என குறிப்பிட்டுள்ளார். எண்பது தொண்ணூறுகளில் மம்முட்டி-ஷோபனா இருவரும் இணைந்து பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.