காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாள சினிமாவின் எவர்கிரீன் சாக்லேட் ஹீரோ என இப்போதும் அழைக்கப்படும் நடிகர் குஞ்சாக்கோ போபன், விரைவில் ரெண்டகம் என்கிற படம் மூலம் தமிழுக்கும் வர இருக்கிறார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் புதிதாக நடிக்க உள்ள 'எந்தாடா ஷாஜி என்கிற படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். தனுஷின் மாரி படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீபன் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனுடன் நடிகர் ஜெயசூர்யாவும் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஸ்வப்னகூடு, ஸ்கூல் பஸ், குல்மால் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான ஷாஜகானும் பரீக்குட்டியும் என்கிற படத்தில் நடித்திருந்த இவர்கள் இருவரும், இந்தப்படத்தில் மீண்டும் இணைகின்றனர்.