திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மலையாள சினிமாவின் எவர்கிரீன் சாக்லேட் ஹீரோ என இப்போதும் அழைக்கப்படும் நடிகர் குஞ்சாக்கோ போபன், விரைவில் ரெண்டகம் என்கிற படம் மூலம் தமிழுக்கும் வர இருக்கிறார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் புதிதாக நடிக்க உள்ள 'எந்தாடா ஷாஜி என்கிற படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். தனுஷின் மாரி படத்தை தயாரித்த லிஸ்டின் ஸ்டீபன் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனுடன் நடிகர் ஜெயசூர்யாவும் இணைந்து நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஸ்வப்னகூடு, ஸ்கூல் பஸ், குல்மால் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான ஷாஜகானும் பரீக்குட்டியும் என்கிற படத்தில் நடித்திருந்த இவர்கள் இருவரும், இந்தப்படத்தில் மீண்டும் இணைகின்றனர்.