இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது அறக்கட்டளை மூலம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரத்ததானம், கண்தானம் செய்யும் பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் இரண்டு மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் ரத்த வங்கி அமைத்துள்ளார். இந்த பணியை அவர் இந்தியா முழுக்க விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறார். நாடு முழுக்க ரத்த வங்கியும் கண்தான வங்கியும் ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
இதன் முதற்கட்டமாக ரத்ததானம், கண்தானம் குறித்த தனது இணைய தளத்தை இந்தியாவில் உள்ள 25 மொழிகளில் தொடங்கி உள்ளார். ஐதராபாத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் இதனை தொடங்கி வைத்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது: இனி மொழி பிரச்சினை இன்றி மக்கள் ரத்ததானம், கண் தானம் செய்ய முன் வரலாம். இவர்களுக்காக இனி ஆன்-லைன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நமக்கெல்லாம் பெருமையாகும். மேலும், கே.சிரஞ்சீவி எனும் புதிய இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிரஞ்சீவி இதுவரை நடித்த படங்கள், பாடல்கள், அவரது வாழ்க்கை வரலாறு போன்றவை இடம் பெற்றுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும். என்றார்.