ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
அக்ஷய்குமார் நடித்த பெல்பாட்டம் படம் தியேட்டர்களில் வெளியானது. மகாராஷ்டிர மாநிலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் அந்த படம் பெரிய நஷ்டத்தை சந்தித்தது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. என்றாலும் அக்ஷய்குமார் தனது படங்கள் தியேட்டரில்தான் வெளியிடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அக்ஷய்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் சூர்யவன்ஷி. இதில் அவருடன் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் நடித்துள்ளனர். ரோஹித் ஷெட்டி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே தயாரான இந்தப் படம் ஊரடங்கு காரணமாக வெளிவரவில்லை. முழுமையாகத் திரையரங்குகள் திறப்பதற்குப் படக்குழு காத்திருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 22ம் தேதி மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சூர்யவன்ஷி தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு பிறகு பாலிவுட்டில் தியேட்டரில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் இதுவாகும். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள், பாலிவுட் சினிமாவின் நிலை சீராகும் என்கிறார்கள்.