மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் நடிகர் ரன்வீர் சிங் - நடிகை தீபிகா படுகோனே. காதலித்து, மணந்து கொண்ட இவர்கள் சினிமா, விளம்பரம் என பிஸியாக உள்ளனர். மும்பையில் கடற்கரை ஏரியாவான அலிபாக் பகுதியில் ரூ.22 கோடிக்கு ஆடம்பர சொகுச பங்களாவை வாங்கி உள்ளனர். 2.25 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த சொத்தில் 18 ஆயிரம் சதுர அடிக்கு வீடு உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளது. செப்., 13ம் தேதி இந்த சொத்திற்கான பத்திரபதிவு நடந்துள்ளதாம். ஸ்டாம்ப் டூட்டியாக மட்டும் ரூ1.32 கோடி வரி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரை பகுதியாக இந்த ஏரியா இருப்பதால் பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்த ஏரியாவில் இதுபோன்று சொத்துக்களை வாங்கி வருகின்றனர். தற்போது மும்பையில் பிரபாதேவி பகுதியில் 4 மாடி கொண்டு குடியிருப்பில் தீபிகா, ரன்வீர் வசித்து வருகின்றனர். இந்த சொத்துக்கள் தவிர இவர்களுக்கு மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளன.