ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் நடிகர் ரன்வீர் சிங் - நடிகை தீபிகா படுகோனே. காதலித்து, மணந்து கொண்ட இவர்கள் சினிமா, விளம்பரம் என பிஸியாக உள்ளனர். மும்பையில் கடற்கரை ஏரியாவான அலிபாக் பகுதியில் ரூ.22 கோடிக்கு ஆடம்பர சொகுச பங்களாவை வாங்கி உள்ளனர். 2.25 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த சொத்தில் 18 ஆயிரம் சதுர அடிக்கு வீடு உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளது. செப்., 13ம் தேதி இந்த சொத்திற்கான பத்திரபதிவு நடந்துள்ளதாம். ஸ்டாம்ப் டூட்டியாக மட்டும் ரூ1.32 கோடி வரி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரை பகுதியாக இந்த ஏரியா இருப்பதால் பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்த ஏரியாவில் இதுபோன்று சொத்துக்களை வாங்கி வருகின்றனர். தற்போது மும்பையில் பிரபாதேவி பகுதியில் 4 மாடி கொண்டு குடியிருப்பில் தீபிகா, ரன்வீர் வசித்து வருகின்றனர். இந்த சொத்துக்கள் தவிர இவர்களுக்கு மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளன.