மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
தமிழ் சினிமாவில் இப்போது ஒரு புது டிரெண்ட் உருவாகியுள்ளது. புதிய படங்களில் இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களைப் பயன்படுத்துவதுதான் அந்த டிரென்ட். பொருத்தமான இடங்களில் வரும் அந்தப் பாடல்கள் படத்துக்கே ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன. பலரும் இளையராஜாவிடம் முறையான அனுமதி பெற்று அப்பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு சிலர் அனுமதி பெறாமல் பயன்படுத்தி பின்னர் நீதிமன்ற வழக்கு, சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன் நடித்து நேற்று வெளியான 'தண்டகாரண்யம்' படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த இரண்டு பழைய பாடல்களைப் படத்தில் பயன்டுத்தியுள்ளார்கள்.
கலையரசன், வின்சு சாம் இடையிலான காதல் காட்சியில் 1989ல் வெளிவந்த 'இதயத்தை திருடாதே' படத்தில் இடம் பெற்ற 'ஓ ப்ரியா ப்ரியா' பாடலையும், பின்னர் ஒரு முக்கியமான காட்சியில், 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' படத்தில் இடம் பெற்ற 'மனிதா மனிதா' பாடலையும் பயன்படுத்தி உள்ளார்கள்.
தினேஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'லப்பர் பந்து' படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்க குடம்' பாடல் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடல்தான் அப்படத்திற்கே ஒரு அடையாளத்தைத் தந்து பெரும் வெற்றியைப் பெற வைத்தது.