அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
அதிரடியான கருத்துக்களை துணிச்சலாக சொல்வதற்கு தயங்காதவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் கடந்த வருடம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்த சமயத்தில், சுஷாந்தின் வாய்ப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதற்கு காரணம், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மற்றும் அவரைப்போன்ற வாரிசு நடிகர்கள் தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். குறிப்பாக கரண் ஜோஹரை நேபோடிசம் கிங் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் கார்கில் வீரர் விக்ரம் மல்ஹோத்ரா வாழ்க்கை பற்றிய படமாக ஷெர்ஷா என்கிற படம் வெளியாகி இருந்தது. பலரின் பாராட்டுக்களை பெற்ற இந்தப்படம் கங்கனாவின் பாராட்டையும் பெற தவறவில்லை. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தை தயாரித்தது கங்கனாவின் பரம எதிரியான கரண் ஜோஹர் தான், அவர் மீதான தனது எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல படைப்புகளை பாராட்ட வேண்டும் என்கிற நோக்கில் கங்கனா இந்த படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என்றே தெரிகிறது.