மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அதிரடியான கருத்துக்களை துணிச்சலாக சொல்வதற்கு தயங்காதவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் கடந்த வருடம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்த சமயத்தில், சுஷாந்தின் வாய்ப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதற்கு காரணம், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மற்றும் அவரைப்போன்ற வாரிசு நடிகர்கள் தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். குறிப்பாக கரண் ஜோஹரை நேபோடிசம் கிங் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் கார்கில் வீரர் விக்ரம் மல்ஹோத்ரா வாழ்க்கை பற்றிய படமாக ஷெர்ஷா என்கிற படம் வெளியாகி இருந்தது. பலரின் பாராட்டுக்களை பெற்ற இந்தப்படம் கங்கனாவின் பாராட்டையும் பெற தவறவில்லை. ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தை தயாரித்தது கங்கனாவின் பரம எதிரியான கரண் ஜோஹர் தான், அவர் மீதான தனது எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல படைப்புகளை பாராட்ட வேண்டும் என்கிற நோக்கில் கங்கனா இந்த படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என்றே தெரிகிறது.