என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா கடந்த ஜூன் மாதம் ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஆபாச படமெடுப்பதில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாக அது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார் ஷில்பா ஷெட்டி.
இப்படியான நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார் ஷில்பா. அதில், சில தவறுகளை செய்யாமல் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது. ஆனால் அந்த தவறுகள் பிறரை காயப்படுத்தாத அபாயகரமான தவறுகளாக இருக்காது என்று நம்புவோம். ஆனால் தவறுகள் செய்யப்போகிறேன். அதிலிருந்து என்னை மன்னித்து, அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டி, நான் தவறு செய்து விட்டேன். ஆனாலும் பரவாயில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.