மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மெய்க்காப்பாளரான ஜிதேந்திர ஷிண்டே என்பவர் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பாதித்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது. அதோடு 5 வருடங்களுக்கு பிறகு ஒரு பிரபலத்திற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்ட நபர் பாடிகார்டாக இருக்கக்கூடாது என்கிற விதி இருந்தபோதும், இந்த ஜிதேந்திர ஷிண்டே அமிதாப்பச்சனிடம் ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் ஜிதேந்திர ஷிண்டே, வருடத்துக்கு ஒன்றரை கோடி ரூபாயை அமிதாப்பச்சனிடம சம்பாதித்தாரா? இல்லை வேறு வழியில் சம்பாதித்தாரா? என்று அவரிடத்தில் மும்பை போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. இந்தவிசாரணையில், தனது மனைவி ஒரு செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன்மூலம் மும்பை பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதால் இந்த ஒன்றரை கோடி வருமானம் கிடைத்து வருவதாகவும் விசாரணையில் அவர் கூறியிருக்கிறார்.
இந்த விசாரணைக்குப்பிறகு அமிதாப்பச்சனிடம் கடந்த 6 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக இருந்து வந்த ஜிதேந்திர ஷிண்டே மும்பை தெற்கு காவல் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.