படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். “குச் குச் ஹேதா ஹை, கபி குஷி கபி கம், கபி அல்விதா நா கெஹ்னா, மை நேம் இஸ் கான், ஸ்டூடன் ஆப்த இயர், பாம்பே டாக்கீஸ், ஹே தில் ஹை முஷ்கில்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தனது தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். கரண் ஜோஹர் கடைசியாக இயக்கிய படம் 2016ம் ஆண்டு வெளிவந்தது. கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை. தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
தன்னுடைய இடைவெளிக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தனது புதிய படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்க 'ராக்கி அஹவர் ராணிகி பிரேம் கஹானி' என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துளளார். இன்று ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு இப்படம் வெளியாகும்.
“லென்ஸுக்கு முன்னால் எனது அபிமான மக்கள் இருக்கா, அதன் பின்னால் நான் இருப்பது த்ரில்லிங்காக உள்ளது” என இந்த புதிய பட அறிவிப்பு குறித்து கரண் குறிப்பிட்டுள்ளார்.