32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடன ஆளுமை சரோஜ்கான். 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்தவர். பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரின் வீட்டுக்குள்ளும் எந்த முன் அனுமதியும் இன்றி செல்லக்கூடிய ஒரே நபர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு என்று கூட சொல்வார்கள்.
அதிதிராவ் நடித்த சிருங்காரம் படத்திற்கு நடனம் அமைத்தார். இந்த படத்திற்காக சரோஜ்கானுக்கு தேசிய விருது கிடைத்தது. இதுதவிர மேலும் இரு இந்தி படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். சரோஜ்கான் நடனம் அமைத்த இந்தி பாடலான ஏக் தோ தீன் பாடல் இன்றளவும் பேசப்படுவதாக இருக்கிறது. மாதுரி தீட்சித், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களின் ஆஸ்தான நடன இயக்குனராக இருந்தார்.
கடந்த ஆண்டு சரோஜ்கான் மரணம் அடைந்தார். தற்போது அவரது வாழ்க்கை சினிமா ஆகிறது. இதனை அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று அவரது மகனும், நடன இயக்குனருமான ராஜூகான் அறிவித்துள்ளார். சரோஜ்கானாக நடிக்க பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார் ராஜூகான்.