மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
முதன்முதலில் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானாலும், நடிகர் பிரபுதேவாவை ஸ்டார் இயக்குனர் அந்தஸ்திற்கு உயர்த்தியது பாலிவுட் திரையுலகம் தான். அதைத்தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனராகவும் இரட்டை குதிரை சவாரி செய்து வந்த பிரபுதேவா, கடந்த மூன்று வருடங்களில், ஹிந்தியில் சல்மான்கானை வைத்து தபாங்-3 மற்றும் சமீபத்தில் வெளியான ராதே என இரண்டு படங்களை இயக்கினார். இரண்டுமே தோல்விப்பட வரிசையில் தான் இடம் பிடித்தன.
இதனால் ஒரு வெற்றிப்படம் தந்து, தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரபுதேவா. அதேசமயம் இனி நேரடி கதைகளை நம்பாமல், தனக்கு எப்போதும் கை கொடுக்கும் ரீமேக்கையே இந்த முறையும் கையில் எடுக்க உள்ளாராம் பிரபுதேவா.
அந்தவகையில் ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டான ஒரு படத்தை தான் ஹிந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் சாஜித் நாடியத்வாலா ஏற்கனவே வாங்கியுள்ளார். இதன் ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்கள், இது எந்த படத்தின் ரீமேக் என்பது குறித்து, தற்போதைக்கு படத்தின் தயாரிப்பாளரும், பிரபுதேவாவும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளார்களாம்.