புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
1980 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த பாலிவுட் நடிகை சபனா ஆஸ்மி, அரசியலிலும் குதித்து பார்லிமென்ட் உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றினார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சபனா ஆஸ்மி தற்போது முதுமை காரணமாக சினிமா, அரசியல் இரண்டில் இருந்தும் விலகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 70 வயதான சபனா ஆஸ்மி, ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்து ஏமாந்திருக்கிறார். இதுகுறித்து அவர் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதி இருப்பதாவது: நான் மதுபானம் வாங்க ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தேன். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்தி விட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அதனை டெலிவரி செய்யவில்லை. நான் போன் செய்தும் எனது அழைப்புகளை எடுக்கவில்லை. என்னிடம் மோசடி செய்துவிட்டனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள். என்று எழுதியுள்ளார்.