ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
1980 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த பாலிவுட் நடிகை சபனா ஆஸ்மி, அரசியலிலும் குதித்து பார்லிமென்ட் உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றினார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சபனா ஆஸ்மி தற்போது முதுமை காரணமாக சினிமா, அரசியல் இரண்டில் இருந்தும் விலகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 70 வயதான சபனா ஆஸ்மி, ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்து ஏமாந்திருக்கிறார். இதுகுறித்து அவர் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதி இருப்பதாவது: நான் மதுபானம் வாங்க ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தேன். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்தி விட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அதனை டெலிவரி செய்யவில்லை. நான் போன் செய்தும் எனது அழைப்புகளை எடுக்கவில்லை. என்னிடம் மோசடி செய்துவிட்டனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள். என்று எழுதியுள்ளார்.