6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
1980 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த பாலிவுட் நடிகை சபனா ஆஸ்மி, அரசியலிலும் குதித்து பார்லிமென்ட் உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றினார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சபனா ஆஸ்மி தற்போது முதுமை காரணமாக சினிமா, அரசியல் இரண்டில் இருந்தும் விலகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 70 வயதான சபனா ஆஸ்மி, ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்து ஏமாந்திருக்கிறார். இதுகுறித்து அவர் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதி இருப்பதாவது: நான் மதுபானம் வாங்க ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தேன். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்தி விட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அதனை டெலிவரி செய்யவில்லை. நான் போன் செய்தும் எனது அழைப்புகளை எடுக்கவில்லை. என்னிடம் மோசடி செய்துவிட்டனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள். என்று எழுதியுள்ளார்.