பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது நடந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது நினைவு தினம் வர இருக்கிறது. இதையொட்டி ஒரு சிலர் சுஷாந்த் பெயரில் உதவி செய்கிறோம் என கூறிக்கொண்டு அவர் பெயரில் நன்கொடை, நிதி வசூலில் இறங்கியுள்ளனர்.
இந்த செய்திகளை கேள்விப்பட்ட சுஷாந்த் சிங்கின் சகோதரிகளில் ஒருவரான மிட்டு சிங் என்பவர் இதுகுறித்து சற்று காட்டமாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர், தாங்களாகவே உரிமை எடுத்துக்கொண்டு சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பெயரை பயன்படுத்தி நன்கொடை வசூலிப்பதாக கேள்விப்பட்டேன்.. தங்களது சுயநலத்திற்காக அவர்கள் இவ்வாறு செய்வது மனிதத்தன்மையற்ற செயல்.. நாங்கள் சுஷாந்த் சிங் சார்பாக நன்கொடை வசூலிக்க அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு நபரையும் அறிவிக்கவில்லை. தவிர இப்படி எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த சோக நிகழ்வை முன்னிறுத்தி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் துளியும் இல்லை” என கூறியுள்ளார்.