நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார். அந்தாஸ், தேவதாஸ், மொகலே ஆஸம், ஆஸாத் உள்பட 60கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 93 வயதான திலீப் குமாருக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மும்பை லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர் மனைவி சைரா பானு கூறியிருப்பதாவது: அவருக்கு திடீரென்று நள்ளிரவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடடினாக மருத்துவமனையில் அனுமதித்தோம். எனக்கும், அவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களாக யாரையும் சந்திக்கவில்லை. அதனால் எங்களுக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை.
அதனால் தான் அவரை கொரோனா சிகிச்சை அளிக்காத மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். மூச்சு திணறலுக்கான காரணத்தை கண்டறிய டாக்டர்கள் பலவித சோதனைகளை நடத்தி வருகிறார்கள். தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறது. என்றார்.