ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் 'ராதே' படம் நாளை மறுநாள் டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது. அதற்கான கட்டணமாக 249 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தன்னுடைய படம் தியேட்டர்களில் வெளியாகாத காரணத்தால் அதன் வசூல் ஜீரோ எனக் குறிப்பிட்டுள்ளார் சல்மான்கான்.
“நான் எப்போதுமே ரம்ஜானுக்கு என்னுடைய ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். இந்த முறை ஜீ ஆதரவில் படத்தை டிஜிட்டல் தளங்களில் வெளியிடுகிறோம். தற்போது மக்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலரது வருமானம் குறைந்துவிட்ட நேரத்தில் இப்படத்தை மிகக் குறைந்த செலவில் வீட்டிலேயே பார்க்கலாம். இந்த நேரத்தில் மக்களுக்கு கொஞ்சம் என்டெர்டெயின்மென்ட் கொடுப்பதை விரும்புகிறேன்.
இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் சம்பாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தியேட்டர்காரர்களிடம் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் நீண்ட காலமாக இதற்காக காத்திருந்தோம், நாடு முழுவதும் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடலாம் என்று இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது தெரியவில்லை.
'ராதே' படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஜீரோவாகத்தான் இருக்கும். ஒரு சல்மான்கான் படத்தின் மிகக் குறைந்த வசூலை இந்தப்படம் பெறும். மக்கள் மகிழ்ச்சியாகவே, கவலையாகவே இருக்கலாம். இந்தப்படம் இந்தியாவில் சில தியேட்டர்களில் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் வழக்கத்தை விடக் குறைவான தியேட்டர்கள்தான். அதனால் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மிகவும் மோசமாகத்தான் இருக்கும்.