மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானின் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகப்போகிறது. தற்போது பதான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை அடுத்து அவர் பிரபல இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி டைரக்சனில் நடிக்கப்போகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2002ல் வெளியான தேவதாஸ் படத்தில் முதன்முறையாக சஞ்சய்லீலா பன்சாலி டைரக்சனில் நடித்திருந்தார் ஷாருக்கான். அந்தவகையில் 19 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். காதல் கதையாக உருவாகும் இந்தப்படத்தில், தனது காதலை தான் காதலிக்கும் பெண்ணிடம் உணர்த்துவதற்காக உலகத்தில் உள்ள பாதி நாடுகளுக்கு மேல் சுற்றி அலையும் ஒரு இளைஞன் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளாராம்.