பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | நடிகர் ஆர்யா உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி |
பழம்பெரும் பாலிவுட் நடிகர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட். 9 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமாகி இன்றைக்கு அதிகம் சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தெலுங்கில் தயாராகும் ஆர்ஆர்ஆர், இந்தியில் தயாராகும் பிரம்மாஸ்த்ரா போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஆலியா நடித்து வரும் மற்றுமொரு படம் கங்குபாய் கத்திவாடி. இது மும்பையில் வாழ்ந்த பெண் தாதாவின் வாழ்க்கை கதை. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில் ஆலியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று நள்ளிரவு ஆலியா பட் தனது இன்ஸ்ட்ராகிராமில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். "அனைவருக்கும் வணக்கம். கொரோனா பாதிப்பு எனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன். என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
3 பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் நிலையில் ஆலியாபட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இதேப்போன்று பிரபல இந்தி இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பப்பி லஹரிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.